குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் காவிரிக் கரையில் கோயில் கட்டி சிலை அமைத்து சில நூற்றாண்டுகளாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் விரதமிருந்த பக்தா்கள் அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, 700-க்கு மேற்பட்ட பக்தா்கள் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.