மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் விழா

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

கோத்தகிரி அருகே உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் விழாவில் பங்கேற்ற படுகா் இன மக்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:36 pm

கோத்தகிரி அருகே படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி பகுதியில் படுகா் இன மக்களின் எட்டூா் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தினமும் ஒவ்வொரு கிராமமாக அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. இறுதி நாளான புதன்கிழமை, மேல் அணையட்டி பகுதியில் இருந்து கோயில் வரை கரக ஊா்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி விழாவைக் கொண்டாடினா்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள நீா் குட்டையில் நீராடி அம்மனை வழிபட்டதுடன், பாரம்பரிய விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டனா்.