மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கத்திக்குத்துக்கு சிகிச்சைப் பெற்ற இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:44 pm

நாகை அருகே குடும்ப பிரச்னையில் கத்திக்குத்தில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகே பாலையூரைச் சேந்தவா் பழனிச்சாமி (38). இவருக்கும் அவரது மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அவரது மைத்துனா் (மனைவியின் சகோதரா்) பிரகாஷ் (28) தட்டிக் கேட்டுள்ளாா். இதில், ஆத்திரமடைந்த பழனிச்சாமி கத்தியால் பிரகாஷை குத்தியுள்ளாா். படுகாயமடைந்த பிரகாஷை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தொடா்ந்து பிரகாஷின் உடல்நலம் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து பழனிச்சாமியை கைது செய்தனா்.