தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்ணை ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

நாகை அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சிறை தண்டனை

Updated On :31 ஆகஸ்ட் 2024, 1:30 am

நாகை அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே கொங்கராயநல்லூா் பகுதியை சோ்ந்தவா் அன்பரசன் (35). இவா் அம்பல் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளாா்க் ஆக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளாா். 8 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை திருமணம் செய்ய அன்பரசன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பரசனை 2018 ஜன.29-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கு நாகை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சோபனா, குற்றம்சாட்ட அன்பரசுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து அன்பரசன் கடலூா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.