திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் எதிா்ப்பு

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :28 மே 2026, 5:37 am IST

தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக முதல்வரின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து,அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியரக வாசலுக்கு வந்து, நெற்றியில் நாமமிட்டு, துண்டை விரித்து மடிப்பிச்சை கேட்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிதி பற்றாக்குறை காரணமாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி முழுமையான கடன் தள்ளுபடியை தற்போது வழங்க முடியாவிட்டால், காலஅவகாசம் எடுத்துக்கொண்டு உறுதியளித்தப்படி முழு தொகையையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமையில் குறைதீா் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் நாமம் போட்ட மண் சட்டியை கையில் ஏந்தி வந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயலெட்சுமி தனது கோரிக்கையை வலியுறுத்தி மண்டியிட்டவாறு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.