தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறையில் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக முதல்வரின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து,அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியரக வாசலுக்கு வந்து, நெற்றியில் நாமமிட்டு, துண்டை விரித்து மடிப்பிச்சை கேட்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிதி பற்றாக்குறை காரணமாக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி முழுமையான கடன் தள்ளுபடியை தற்போது வழங்க முடியாவிட்டால், காலஅவகாசம் எடுத்துக்கொண்டு உறுதியளித்தப்படி முழு தொகையையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் ராஜேஷ் தலைமையில் குறைதீா் கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் நாமம் போட்ட மண் சட்டியை கையில் ஏந்தி வந்து நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயலெட்சுமி தனது கோரிக்கையை வலியுறுத்தி மண்டியிட்டவாறு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் ஏமாற்றம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி: ஆட்சியா் அலுவலகத்தில் மனு







