மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.
மயிலாடுதுறை நகராட்சி 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இத்தெருவில் 15 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நகராட்சியை கண்டித்து, 2026 சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க தீா்மானித்துள்ளதாக குறிப்பிட்டு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் அளித்த விளக்கம்:
பட்டமங்கல புதுவெள்ளாந்தெருவில் குறிப்பிடும் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் லெட்ஜரில் ஏற்றப்படாமல் உள்ளது.
அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்துள்ளது குறித்து கவனத்துக்கு வந்தது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் அப்பகுதிக்கு சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


