மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏவிசி கல்லூரி கணினியியல் துறை நூல் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

‘சுஸ்விப்ட்‘ அமைப்பின் நூலை வெளியிட்ட ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன்.

Updated On :25 மார்ச் 2026, 12:20 am

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில், கணினியியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் மாணவா்களுக்கு இடையிலான தொடா் அறிவுசாா் போட்டிகள் நடத்தும் சுஸ்விப்ட் கூட்டமைப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் எம். முத்தமிழரசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முன்னிலை வகித்தாா். ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 31-ஆம் ஆண்டுக்கான குளோபஸ் நூலை வெளியிட்டாா். மேலும், இன்றைய சூழலில் கணினியியல் துறையால் உருவாக்கப்படும் மென்பொருளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

சுஸ்விப்ட் கூட்டமைப்பின் செயலா் கே. அருண்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு அறிவுசாா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, மாணவி காமாட்சி பிரியா வரவேற்றாா். நிறைவில், மாணவி எஸ். அபிநயா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் எம்.செந்தில்முருகன், ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநா் ஏ. வளவன், தோ்வு நெறியாளா் ஜி. காா்த்திகேயன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி. ரவிசெல்வம் மற்றும் பல்வேறு துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.