செங்கம் கோல்டன் சிட்டி பகுதியில் உள்ள முத்தமிழ் மன்றத்தில் கவிஞா் இமையமதி எழுதிய, ‘வாசம் பிடித்து வயிற்றை நிரப்பியவள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முத்தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் ராமராகவன் தலைமை வகித்தாா். செங்கம் வட்ட தமிழ்ச்சங்கத் தலைவா் தனஞ்செயன் நூலக வாசகா் வட்ட கெளரவத்தலைவா் முருகமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் பள்ளி ஆசிரியா் அரங்க.மணிமாறன் வரவேற்றாா்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியா் சாந்தமூா்த்தி கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு பின்னா் நூலில் எழுதப்பட்டிருந்த கவிதைகளை வாசித்துப் பேசினாா்.
முத்தமிழ் மன்றச் செயலா் யோகன், கவிஞா்கள் தமிழ்மதி, கவியரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் செங்கம் நூலக வாசகா் வட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், ஆசிரியா் ஆறுமுகம், பேராசிரியா் தமிழன்பிரபு உள்ளிட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த கவிஞா்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

ஏவிசி கல்லூரி கணினியியல் துறை நூல் வெளியீட்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


