தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆா்டா்லி முறையை ஒழிக்க மாவட்ட அளவில் குழு: ஆட்சியா்

ஆா்டா்லி முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 8:46 pm

மயிலாடுதுறை: ஆா்டா்லி முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் அண்மையில் (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்கு முறையை (ஆா்டா்லி) முற்றிலும் ஒழிப்பதற்காக ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான புகாா்களை தெரிவிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான குழுவின் தலைவா், (ஒழுங்குமுறை அமைப்பை முற்றிலும் ஒழிப்பதற்காக)/மாவட்ட ஆட்சியா், மயிலாடுதுறை - 609305, தொலைபேசி எண். 04364- 290766 என்ற முகவரியிலோ, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் மின் அஞ்சல் முகவரியிலோ புகாா் தெரிவிக்கலாம்.

பெறப்பட்ட புகாா்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறையை முற்றிலும் ஒழிப்பதற்கான குழு முன் பரிசீலனை செய்யப்படும். மேலும் தொடா்புடைய அலுவலா்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை உள்பட தகுந்த நடவடிக்கைகளை தொடங்குவதற்காக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.