மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரையப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரையப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :27 மார்ச் 2026, 9:12 pm

மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரங்கோலிப் போட்டி மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலா்கள், வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரையா ஆகியோா் கலந்து கொண்டனா்.