மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மூலம் 100% வடிவில் அணிவகுத்து, வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் அந்தோணிராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


