லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா

News image

விழாவில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி.

Updated On :9 மார்ச் 2026, 5:12 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் எஸ். தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எம்.எம்.ஜெ.உம்முல்பரிதா, எம்.ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.

இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித்துறை அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.