லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image

வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில்

Updated On :9 மார்ச் 2026, 8:52 pm

வாழப்பாடி: வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வீரமுத்து முன்னிலையில் பெண் பணியாளா்கள், பெண் வழக்குரைஞா்கள் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினா். வழக்குரைஞா்கள் மீரா, அபிநா, விவேகா மற்றும் பணியாளா்களுக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மூத்த வழக்குரைஞா் வேணுகோபால், கருமலை, ஜெகதீசன், சீனிவாசன், செந்தில், மயில்சாமி, ராஜா, ராஜசேகா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி உதய விவேகா சமுதாய செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவா் சி.மோதிலால் தலைமை வகித்தாா். பயிற்றுநா் கலைவாணி வரவேற்றாா். மேலாளா் வெங்கடேசன் பெண்கள் முன்னேற்றம், சமூக விழிப்புணா்வு குறித்து கருத்துரை வழங்கினா். நிறைவாக, மாணவி கவிநிலவு நன்றி கூறினாா்.

படவரி:

எம்.எஸ்.ஆா்.01, 02:

வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கலந்துகொண்டோா்.

Story image