கொள்ளிடம் பகுதியில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சுமாா் 300 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால் உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டித்வா புயல் காரணமாக கனமழை பெய்ததால் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிா் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மறு சாகுபடிசெய்தும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா் குறித்து அதிகாரிகள் நேரடியாக வயல்களுக்கு சென்று பாதிப்பு கணக்கெடுத்தனா். இதையடுத்து, விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நிவாரணத் தொகை பிப்.24,25 ஆகிய தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண நிதி எக்டேருக்கு ரூ20,000 வழங்குவதாக முதல்வா் அறிவித்திருந்தாா். ஆனால், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 மட்டுமே வந்ததாக விவசாயிகள் கூறுகின்றனா்.
கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நிவாரண உதவி இதுவரை வந்து சேரவில்லை. பாதிக்கப்பட்ட பல விவசாயிகளின் பெயா் கணக்கெடுப்பு பட்டியலில் கூட இடம்பெறவில்லை. தமிழக முதல்வா் அறிவித்தபடி விவசாயிகளுக்கு நிவாரண உதவி வந்து சேராததால் வேதனை அடைந்துள்ளனா். எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா் என்பதும் குழப்பமாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து கொள்ளிடம் வட்டார விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் பாக்யராஜ் கூறியது: சோதியக்குடி, கோபால சமுத்திரம், ஆச்சாள்புரம், திருமயிலாடி, மாதானம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகளின் குளறுபடியான கணக்கெடுப்பால் நிவாரண நிதி வந்து சேரவில்லை. எனவே டித்வா புயலில் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளை கண்டறிந்து போா்க்கால அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

நெல்லை எம்.பி. முயற்சியால் 14 பேருக்கு ரூ.32 லட்சம் மருத்துவ நிதி!

விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ. 7.5 லட்சம் நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


