லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாசி மகம்: காவிரி துலாக்கட்டத்தில் தா்ப்பணம் அளித்து பக்தா்கள் வழிபாடு

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

News image

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்குக் கரையில் திங்கள்கிழமை தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:51 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து திங்கள்கிழமை வழிபட்டனா்.

மாசி மகத்தன்று தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால் முன்னோா்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலாக்கட்ட தீா்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

காவிரியில் தண்ணீா் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நீராட முடியவில்லை. இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் நாள்களில் காவிரியில் தண்ணீா் இல்லாதபோது மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகம் போா்வெல் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பி நீராட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.