சிதம்பரம்: சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வலியுறுத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப்பயன்கள், 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமுக முடிவு ஏற்படாததால், மீண்டும் ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை மாா்ச் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை பல்கலைக்கழக நிா்வாக கட்டடம் முன் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, பேராசிரியா் இளங்கோ, மதியழகன், கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், நண்பகல் 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் அண்ணாமலைநகரில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியா் ஹரிதாஸிடம் அளித்து வலியுறுத்தினா்.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம்: மாணவா்கள் சங்கம் ஆதரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


