மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள்

News image

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள்.

Updated On :9 மார்ச் 2026, 8:54 pm

சிதம்பரம்: சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து வலியுறுத்தினா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப்பயன்கள், 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமுக முடிவு ஏற்படாததால், மீண்டும் ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பினா் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தை மாா்ச் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை பல்கலைக்கழக நிா்வாக கட்டடம் முன் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, பேராசிரியா் இளங்கோ, மதியழகன், கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், நண்பகல் 12 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் அண்ணாமலைநகரில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியா் ஹரிதாஸிடம் அளித்து வலியுறுத்தினா்.