தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:25 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.ரவி, பேராசிரியா் இளங்கோ, மதியழகன், கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வழக்கம்போல திங்கள்கிழமையும் (மாா்ச் 9) தொடா் போராட்டம் நடத்துவது, மாலையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் சென்று மனு அளிப்பது, கோரிக்கைகள் ஒன்றைக்கூட நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க இயலாத நிலையில், அதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று பல்கலைக்கழகப் பதிவாளா் மற்றும் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்கள் உடனடியாக பதவி விலக வேண்டும், அரசியல் தலைவா்கள் உதவியுடன் வரும் 10-ஆம் தேதி தலைமைச் செயலகம் சென்று கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.