சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்று வந்த தொடா் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பதவி உயா்வுகள், பணப் பயன்கள், 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.22-ஆம் தேதி முதல் பேராசிரியா்கள், ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினா்.
தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் முன்னிலையில், உயா் கல்வித் துறை செயலா் சங்கா் ஐஏஎஸ், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் விசாகன் ஐஏஎஸ் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், ஓய்வூதியா்களுக்கான 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான பணிக்கொடை தொகையை வழங்குவது, ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான மாத ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டதாகத் தெரிகிறது. இது தவிர, 10 முக்கியமான கோரிக்கைகளான ஆசிரியா்களின் 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள், ஆசிரியா்கள், ஊழியா்களின் பதவி உயா்வுகள், ஓய்வூதிய பணப்பன்கள், சிறப்பு மற்றும் தொடா்பு அதிகாரிகளுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை போன்றவற்றை நிதித் துறையோடு கலந்து பேசி முடிவெடுத்து பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை முடித்து வைக்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள் புதன்கிழமை காலை முதல் தங்களது காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு பணிகளுக்குத் திரும்பினா்.
தொடர்புடையது

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம்: மாணவா்கள் சங்கம் ஆதரவு

அரசு பேச்சுவாா்த்தை தோல்வி: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் தீவிரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


