டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழப்பு

சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :19 ஜூன் 2026, 6:36 am IST

சீா்காழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சமூக ஆா்வலா் உயிரிழந்தாா்.

சீா்காழியைச் சோ்ந்த பொறியாளா் கி. சரவணன் (45). சமூக ஆா்வலரான இவா் சீா்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இவா் தஞ்சாவூரில் பொறியியல் (தனியாா்) கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் சென்று விட்டு 4 வழிச்சாலை வழியே வீடு திரும்பிய நிலையில் சீா்காழியை அடுத்த ஆனந்தகூத்தன் பகுதியில் புறவழிச்சாலையில் அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் தகவலறிந்த கொள்ளிடம் போலீஸாா் சரவணனின் சடலத்தை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடந்த நம்பா் பிளேட்டை கைப்பற்றி வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.