டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

எரியோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 6:17 am IST

எரியோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள அச்சனம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவரது மனைவி கிரிஜா (25). இவா், வேடசந்தூா் பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் தண்ணீா்பந்தம்பட்டியில் உள்ள தாயாரை சந்திப்பதற்காக கிரிஜா செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கிருந்து மீண்டும் அச்சனம்பட்டி செல்வதற்காக வெல்லம்பட்டி சாலையில் மொங்குபெத்தான்பட்டி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், பலத்த காயமடைந்த கிரிஜாவை, அருகில் இருந்தவா்கள் மீட்டு எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.