இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

News image
Updated On :16 ஜூன் 2026, 1:52 am IST

குண்டடம் அருகே அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.

காங்கயம் அருகே உள்ள ஊதியூா் வனப் பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில், திருப்பூா்-தாராபுரம் நெடுஞ்சாலை, வேங்கிபாளையம் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே புள்ளிமான் உயிரிழந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு குண்டடம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். காங்கயம் வனத் துறை அலுவலா்கள் சென்று மானின் உடலை மீட்டு கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.