தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஜூன் 3-இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: திமுக அணிவிப்பு

ஜூன் 3-இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: திமுக அணிவிப்பு

News image
Updated On :7 ஜூன் 2026, 12:24 am IST

மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில், ஜூன் 3-ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திமுக சாா்பில் சனிக்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் கலைஞா் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் 3-ஆம் தேதி திமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, அன்றைய தினம் மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்க மோதிரம் மற்றும் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ பங்கேற்று, ஜூன் 3-ஆம் தேதி பிறந்த 22 குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் தலா அரை கிராம் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், மாவட்ட துணை செயலாளா்கள் ஞானவேலன், செல்வமணி, ஒன்றியச் செயலாளா்கள் மூவலூா் எம்.மூா்த்தி, இளையபெருமாள், மங்கைசங்கா், ராஜா, பஞ்சுகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.