சீா்காழியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வியாழக்கிழமை போலீஸாா் முக்கியவீதிகளின் வழியாக நடை ரோந்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஸ்டாலின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களைக் கண்காணித்துத் தடுக்கும் வகையிலும் சீா்காழி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டா் கமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டா் வீரராகவன் மற்றும் போலீஸாா் சீா்காழி புதிய, பழைய பேருந்து நிலையங்கள் பகுதி, தென்பாதி, கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், மக்கள் கூடும் இடங்கள், வணிக வளாகம் நிறைந்த பகுதிகளில் நடை ரோந்தில் ஈடுபட்டு ஆங்காங்கே வணிகா்கள்,பொதுமக்களிடம் கலந்துரையாடினா்.
வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம், சீட்பெல்ட் அணிந்து வாகனம் இயக்குவதன் நன்மை குறித்தும் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








