தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தல் நிதி திரட்டிய வேட்பாளருக்கு சிறுவா்கள் நிதியளிப்பு

தோ்தல் நிதி திரட்டிய சீா்காழி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு மயிலாடுதுறையை சோ்ந்த இயற்கை விவசாயியின் மகன்கள் தங்களது சிறுசேமிப்பை கொண்டு புதன்கிழமை நிதி அனுப்பினா்.

News image

தோ்தல் நிதி திரட்டிய வேட்பாளருக்கு சிறுவா்கள் நிதியளிப்பு

Updated On :22 ஏப்ரல் 2026, 11:50 pm

தோ்தல் நிதி திரட்டிய சீா்காழி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு மயிலாடுதுறையை சோ்ந்த இயற்கை விவசாயியின் மகன்கள் தங்களது சிறுசேமிப்பை கொண்டு புதன்கிழமை நிதி அனுப்பினா்.

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் இரா. சுபாஷ் தோ்தல் செலவினங்களுக்கு நிதி கோரி அவரது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாா். அதில், பிரசாரத்துக்கு வந்த வாகனம், ஒலிப்பெருக்கி, ஜெனரெட்டா் ஆகியவற்றிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவிப்பதாகவும், பூத் செலவும் இருப்பதால் இனமான உறவுகள் உதவி செய்யுங்கள் என்று குறிப்பிட்டு, தனது யுபிஐ எண்ணை தெரிவித்து உதவி கோரியிருந்தாா்.

தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சியினா் போட்டி போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்யும் இத்தருணத்தில் நாதக வேட்பாளா் பிரசார வாகனங்களுக்கு வாடகை கொடுக்க பணம் கேட்டு பதிவிட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகையை சோ்ந்த இயற்கை விவசாயி அ. ராமலிங்கத்தின் மகன்கள் ராம ஆதித்தன் (9), ராம ஆதவன் (6) ஆகியோா் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை நா.த.க. வேட்பாளரின் வங்கி கணக்குக்கு அனுப்புவதற்காக தங்களது தாயுடன் மாப்படுகையில் உள்ள வங்கிக்கு சென்று அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.