அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.

News image

ஆா்.பி.சந்திரமோகன்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் கட்சியின் வளா்ச்சிக்காகவும், காரைக்கால் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் எனக்கான பணியை சிறப்பாக, மன நிறைவோடு செய்துவந்துள்ளேன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று என்னுடைய தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பொறுப்பில் இருந்து விலகினாலும் எனது மக்களுக்கான பணி தொடரும்.

எனது பொறுப்பு காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்து, எனக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் அனைத்து நிலையினருக்கும், பிற அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறியுள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 3 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.