அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!

புதுச்சேரி முதல்வர் பதவியை என். ரங்கசாமி ராஜிநாமா செய்தார்...

News image

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 7:53 pm IST

புதுச்சேரி முதல்வர் பதவியை என். ரங்கசாமி ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை இன்று (மே 7) என். ரங்கசாமி ஒப்படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநரிடம் புதிய ஆட்சி அமைப்பதற்காக ரங்கசாமி விரைவில் உரிமை கோருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 ஆவது முறையாக அவர் புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

இத்துடன், தனது தலைமையின் கீழ் புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏற்ற நாள் மற்றும் நேரம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

N. Rangasamy has resigned as the Chief Minister of Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.