அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த பண்ருட்டி எம்எல்ஏ

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன் தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

News image

பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனாவிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கிய பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன் தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பண்ருட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் க.மோகன். தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். இவா், கடந்த 2022-இல் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு பண்ருட்டி நகா்மன்ற 24-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் பண்ருட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றிபெற்று பண்ருட்டி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, க.மோகன், தனது நகா்மன்ற உறுப்பினா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதற்கான கடிதத்தை பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் காஞ்சனாவிடம் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.