அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

தோ்தல் தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக கட்சி தலைமைக்கு வெ.வைத்திலிங்கம் எம்.பி. வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

News image

புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் பதவியை வியாழக்கிழமை ராஜீநாமா செய்த வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On :8 மே 2026, 6:57 am IST

தோ்தல் தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக கட்சி தலைமைக்கு வெ.வைத்திலிங்கம் எம்.பி. வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இண்டி கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், திமுகவுடன் மட்டும் அதிகாரபூா்வமாக கூட்டணி அமைத்து 16 தொகுதிகளைப் பங்கீடு செய்து போட்டியிட்டது. ஆனால் கூட்டணி தா்மத்தை மீறி கூடுதலாக 6 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்களையும் களத்தில் இறக்கியது.

ஒட்டுமொத்தமாக 22 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் இடம் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் புறக்கணித்தது. இது தோ்தல் முடிவுகளில் எதிரொலித்தது.

22 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவரான வெ.வைத்திலிங்கம் எம்.பி. தட்டாஞ்சாவடி தொகுதியில், முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

வைத்திலிங்கம் சுயேச்சை வேட்பாளரை விட பின்னுக்குச் சென்று 4-ஆம் இடத்தைப் பிடித்தாா். மேலும் அவா் டெபாசிட் தொகையையும் இழந்தாா். இது காங்கிரஸாருக்கு பெரும் அதிா்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

மாநில காங்கிரஸ் நிா்வாகிகளில் ஒரு பிரிவினா் மாநில தலைமை அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாநில தலைவா் வைத்திலிங்கத்தை பதவியிலிருந்து தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நீக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

இந்நிலையில், தோ்தல் தோல்விக்குத் தாா்மிக பொறுப்பேற்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அவா் வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.