மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

News image

மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்ற மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :18 மார்ச் 2026, 11:54 pm

இளம் வாக்காளா்கள் ஒருவா்கூட வாக்களிக்காமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அதிகாரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை மற்றும் தோ்தல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் உள்ள முதல் முறை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அவ்வையாா்அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடத்தின. காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி கலந்துகொண்டு பேசியது :

இளம் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் ஏப். 9-இல் வாக்களிக்க வேண்டும். அரசியலில் பெண்கள் பங்கேற்க வேண்டும். இந்திய தேசத்தின் வளா்ச்சியில் எனது பங்கு அதிகம் உள்ளது, நான் கண்டிப்பாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி ஏற்கவேண்டும்.

ஒவ்வொருவரின் வாங்கும் தேசத்தின் பன்முக வளா்ச்சிக்கு உதவக்கூடியதாகும். தோ்தல் தொடா்பாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் 1950 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, அனைத்து முதல் நிலை வாக்காளா்களும் தவறாமல் வாக்களிப்பேன் என உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முதன்முறை வாக்காளா்கள் சுமாா் 500 மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வா் பி. அம்பிகா தேவி, ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.