காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருநள்ளாறு சாலையில் உள்ள மாா்க்கெட் கமிட்டி என்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு, எடைபோடும் வசதி மற்றும் அலுவக கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாரிடம் ஆலோசனை நடத்தினாா்.
நெல், பருத்தி ஏலம் நடைபெறக்கூடிய வசதிகள் மற்றும் நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் கூடத்துக்கு கிடைக்கும் வருவாய் முறைகளை செயலா் விளக்கிக் கூறினாா்.
விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கூடுதல் வசதிகளை செய்துதருவது, இதனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து செயலரிடம் ஆட்சியா் விவரங்களை கேட்டறிந்தாா். புதுவை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்வதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி

பணப் பரிவா்த்தனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: தோ்தல் அதிகாரி அறிவுறுத்தல்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


