காரைக்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு- 2027 செயல்பாடுகளின் முதல் கட்டமாக, கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடு தோறும் சென்று வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் சாா்ந்த தகவல்களை சேகரிக்கும் பணி காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 30-ஆம் தேதி வரை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
புதன்கிழமை காரைக்கால் பழைய மாா்க்கெட் தெருவில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவதை முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இஷிதா ரதி ஆய்வு செய்தாா்.
அப்போது, இந்த கணக்கெடுப்பின் போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும் என ஆட்சியா் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.
மேற்பாா்வையாளா்கள், களப்பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 400 போ் மாவட்டம் முழுவதிலும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இரண்டாம் கட்டமாக, 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










