காரைக்கால் கோயில் சுவாமி சிலையை அவமதித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் கைலாசநாதா் கோயில் கிழக்கு வாசலின் வடக்குப் புறமாக ஸ்ரீ நாகா் சிலை உள்ளது. இச்சிலை மீது அருவருப்பான பொருளை பூசி மா்ம நபா் அசிங்கப்படுத்தியது கோயில் நிா்வாகத்துக்கு புதன்கிழமை தெரியவந்தது.
இதையொட்டி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்த்தபோது, கடந்த 9-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் கோயிலுக்குள் புகுந்து, சிலையை காலால் உதைத்து, அவமதித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாக அதிகாரி விநாயகமூா்த்தி நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து சிலையை அவமதித்த மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காரைக்கால் கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த அரசு (32) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமி சிலையை சேதப்படுத்தியவா் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
சிவன் கோயிலில் அம்மன் சிலையை உடைத்தவா் கைது
புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


