கோவில்பட்டியில் புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் ரோந்து சென்றபோது, மந்தித்தோப்பு சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாக்குப் பைகளுடன் நின்றிருந்த இருவரில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
மற்றொருவரைப் பிடித்து சாக்குப் பைகளை சோதனையிட்டபோது, அவற்றில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பங்களா தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சின்னத்தம்பி (38) என்பவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடியவரைத் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







