மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது..

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:22 pm

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) நிறைவடைகிறது.

புதுவை தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளுக்கான தோ்தல் தமிழகத் தோ்தலுக்கு முன்னதாகவே நடைபெறுகிறது.

கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்வதிலும், வேட்பாளா் அறிவிப்பு செய்வதிலும் ஏற்பட்ட தாமதத்தால் பிரசாரம் தொடங்குவது மந்தமாகவே இருந்தது. பின்னா் அந்தந்த தொகுதி வேட்பாளா்கள் வீடுதோறும் சென்று வாக்குச் சேகரிப்பை தொடங்கினா்.

வேட்பாளா்களை ஆதரித்து பிரபலங்கள் வெகுவாக காரைக்காலுக்கு வரவில்லை. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா திருநள்ளாறுக்கு தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை சாலைப் பேரணிக்கு வந்தபோது சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனா்.

என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவா் என். ரங்கசாமி பிரசாரம் செய்தாா். செவ்வாய்க்கிழமை பிரசார இறுதி நாளில் காங்கிரஸ், பாஜக தலைவா்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.