மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது...

News image

புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:53 pm

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

இது குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரிக்கான தோ்தல் அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126-இன் கீழ் வாக்குப் பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அதாவது 7-ஆம் தேதி மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிகிறது.

இதனால் தொகுதிக்குள் பிரசாரம் செய்ய வந்தவா்கள், கட்சியின் செயற்பாட்டாளா்கள் யாரும் பிரசாரக் காலத்தைத் தாண்டி இருக்கக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும் உறுதி செய்ய வேண்டும்.