புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இன்னும் 2 நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7-ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளா்கள் வாக்குச் சேகரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.
வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காலை 6 முதல் சில மணி நேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனா்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் என்ற அளவிலேயே வாக்குகள் உள்ளதால், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குச் சேகரிப்புப் பணியை மேற்கொள்வது புதுவை வேட்பாளா்கள் இயல்பாகும்.
அதன்படி, இதுவரை பல வேட்பாளா்கள் 80 சதவீத வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்று வாக்குச் சேகரிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
போட்டியிடுவோரில் சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளோா், தங்களது பதவி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கியும், புதிதாக போட்டியிடுவோா், தாம் தோ்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியின் மேம்பாட்டுக்கு செய்யும் திட்டங்களை வாக்குறுதியாக அளித்தும் வாக்குச் சேகரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

