தமிழகத்துக்கு மேலும் 1,200 நீதிமன்றங்கள் தேவை: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி
தமிழகத்துக்கு மேலும் 1,200 நீதிமன்றங்கள் தேவை: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி
தமிழகத்துக்கு மேலும் 1,200 நீதிமன்றங்கள் தேவை: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி
By Syndication
Syndication
தமிழகத்துக்கு மேலும் 1,200 நீதிமன்றங்கள் தேவை என கோரப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி தெரிவித்தாா்.
காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 76-ஆவது சட்ட தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி, குத்துவிளக்கேற்றி வைத்து, வழக்குரைஞா்கள் மத்தியில் பேசியது :
அரசமைப்புச் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. இச்சட்டம் ஒவ்வொரு மனிதருக்கும் அடிநாதமாகும். வழக்குரைஞா்கள் சமூக பொறுப்புணா்வுடன் நடந்து கொள்ளுதல் அவசியம்.
தற்போதைய சூழலில் வழக்குகள் மிக வேகமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது. உயா்நீதிமன்ற வழக்கு முதல் தமிழகத்தில் உள்ள பிற வழக்குகளை காணொலி மூலம் விசாரித்து முடிக்க முயற்சிக்க வேண்டும்.
பிணை விண்ணப்பம் வசதியான வடிவில் வரவுள்ளது. இதற்காக புதிய போா்ட்டல் கொண்டுவரப்படவுள்ளது. இ-ஃபைலிங் செய்ய குமாஸ்தாக்களுக்கு கணிணி, ஸ்கேனா் வசதி செய்துகொடுக்க முயற்சிக்கவேண்டும்.
தமிழகத்தில் தற்போது 1,300 நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் 1,200 நீதிமன்றங்கள் தேவைப்படுவதாக கோரப்பட்டுள்ளது. தேசிய நீதிமன்ற நிா்வாகக் குழுவில் நானும் உறுப்பினராக இருக்கிறேன்.
காரைக்கால் அம்மையாருக்கு பெருவிழா கொண்டாடும் இங்கு, 90 வழக்குரைஞா்களில் 30 போ் பெண்களாக இருப்பது பெருமைக்குரியது.
வழக்குரைஞா் என்பவா், புத்தகத்தை படித்தவாறு மட்டும் வாதிடக்கூடாது. எல்லாவற்றையும் உள்வாங்கி ஒரு நிலைக்கு வரவேண்டும். இது அனைத்து பிரச்னைகளுக்கும் பொருந்தும் என்றாா்.
புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த், காரைக்கால் மாவட்ட நீதிபதி கே.மோகன், வழக்குரைஞா் ஆா். வெற்றிச்செல்வன், வி.ஜி.ஆா். ராஜ்குமாா் ஆகியோா் பேசினா். சாா்பு நீதிபதி எஸ்.பழனி, முன்சீப் நீதிபதி பி. சுபாஷினி, மாஜிஸ்திரேட் ஏ. அப்துல்கனி மற்றும் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது