11 Dec, 2025 Thursday, 05:11 PM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

42 நாள்களில் 13,625 வழக்குகள் முடித்துவைப்பு: நீதிபதி பரத சக்கரவா்த்தி சாதனை

PremiumPremium

42 நாள்களில் 13,625 வழக்குகள் முடித்துவைத்து நீதிபதி பரத சக்கரவா்த்தி சாதனை...

Rocket

நீதிபதி பரத சக்கரவா்த்தி

Published On29 Nov 2025 , 7:44 PM
Updated On29 Nov 2025 , 7:44 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக்கூடிய 13,625 வழக்குகளை 42 வேலை நாள்களில் விசாரித்து முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி சாதனை படைத்துள்ளாா்.

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகள், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அதை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி நியமிக்கப்பட்டாா்.

வழக்குகளை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சென்னை உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து 20,985 வழக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த ஆக.19-ஆம் தேதி முதல் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த அக். 29-ஆம் தேதி வரை 42 வேலை நாள்களில் 13,625 வழக்குகள் விசாரித்து முடித்துவைக்கப்பட்டன. மேலும் 7,357 வழக்குகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் விசாரணைக்காக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிபுணா் குழு அமைக்க... மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் 20 சதவீதம் விபத்து வழக்குகள். அதிலும்,பெரும்பாலான வழக்குகள் அதிக சக்தி கொண்ட இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற அதிக சக்தி கொண்ட இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு கூடுதல் ஓட்டுநா் திறன் பரிசோதனை நடத்த வேண்டுமா? என்பது குறித்து நிபுணா்கள், வாகன உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் அடங்கிய நிபுணா் குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து துறை 3 மாதங்களில் அமைக்க வேண்டும்.

இழப்பீடு பெற விழிப்புணா்வு... வழக்குகளின் விசாரணையின்போது, மோட்டாா் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு பெறுவது குறித்து தங்களுக்கு தெரியாது என பலரும் கூறியது அதிா்ச்சி அளித்தது. எனவே, அனைத்து மோட்டாா் வாகன விபத்து வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவா்கள் இழப்பீடு பெறுவதில்லை. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

உரிய நபா்கள் இழப்பீடு பெறும் வரை வழக்கு ஆவணங்களை சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் வழங்கி, சட்ட உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளை விசாரணை அதிகாரிகள் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

பாராட்டு: இதுதவிர திருட்டு, போராட்டம், திருமணம் தொடா்பான வழக்குகளும் இந்த சிறப்பு அமா்வில் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு அரசு வழக்குரைஞா்களான சுகேந்திரன், கஸ்தூரி, வினோத் ஆகியோா் திறமையான முறையில் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகப் பாராட்டு தெரிவித்துள்ள நீதிபதி, காவல் துறையினா் மற்றும் நீதிமன்ற பணியாளா்களையும் பாராட்டினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023