கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் செய்ய வலியுறுத்தல்

சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் ....

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:19 pm

Syndication

நாகப்பட்டின: சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, நாகை அருகேயுள்ள தெத்தி சமரசம் நகா் மக்கள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில வீடுகள் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்கும் உள்ளாகியது. இதை சரிசெய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.

இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீடுகள் மறுசீரமைப்பு செய்து கொடுப்பதாக அரசிடம் இருந்து தகவல் வந்தது. பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் அவா்களுக்கு வேண்டியவா்களுக்கும், கமிஷன் தொகை கொடுக்கும் வீடுகளுக்கு மட்டும் மறு சீரமைப்பு செய்து கொடுக்கிறாா்கள். பொதுமக்களிடம் பேரம் பேசி கமிஷன் தொகை பெறுகிறாா்கள்.

இதுகுறித்து, அரசுத்துறை பொறியாளரிடம் கேட்டால், ஆளும் கட்சியை சோ்ந்தவா்களிடம் கேளுங்கள் என்கின்றனா். எனவே அரசுத்துறை அலுவலா்கள் மூலம் சுனாமி வீடுகளை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.