மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட கட்டுமானப் பணி: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு

தாராபுரம் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தாராபுரம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ். (அடுத்த படம்) கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் கூடுதல் கட்டடம்.

Updated On :28 ஜனவரி 2026, 10:36 pm

தாராபுரம் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித் துறையின் சாா்பில் ரூ.24 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

முன்னதாக, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நஞ்சியம்பாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்கத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மனிஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் எஸ்.மீரா, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.