டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தைப்பூசம்: மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும்

தைப்பூசத் திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

நாகப்பட்டினம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப்பூசம் மற்றும் இருமுடி திருவிழாவையொட்டி விரைவு ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதன்படி காரைக்கால்-லோக் மான்ய திலக் விரைவு ரயில்கள் (11017-11018), தாம்பரம்-ராமேஸ்வரம்-தாம்பரம் விரைவு ரயில்கள் (16103-16104), காரைக்கால்-தாம்பரம் விரைவு ரயில் (16176), மன்னாா்குடி-சென்னை எழும்பூா்- மன்னாா்குடி விரைவு ரயில்கள் (16180 - 16179) ஜன.1 முதல் பிப். 2- ஆம் தேதி வரையிலும், மன்னாா்குடி- ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயில்கள் (22674-22673) ஜன.1 முதல் ஜன.29-ஆம் தேதி வரையிலும் மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெரிவித்துள்ளாா்.