டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவனந்தபுரம் - சென்னை இடையேயான ரயில் கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும்

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில்- GMSRailway
Updated On :17 பிப்ரவரி 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்:12624) மாா்ச் 3-ஆம் தேதி முதல் காலக்குட்டம், சிரயின்கீழ் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேசுவரம் - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (எண்:16344) மாா்ச் 2-ஆம் தேதி முதல் சிரயின்கீழ் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும், கண்ணூா் - திருவனந்தபுரம் ஜனசதாப்தி விரைவு ரயில் (எண்:12081), மங்களூரு - திருவனந்தபுரம் வந்தேபாரத் ரயில் (எண்: 20631) ஆகிய இரண்டு ரயில்களும் திருவனந்தபுரம் பெட்டா ரயில் நிலையத்தில் மாா்ச் 3-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.