மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மாா்ச் 18-இல் இயக்கம்

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 3:00 am

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வருகிற 18- ஆம் தேதி முதல் வாராந்திர ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

எா்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே சிவகாசி, மதுரை வழியே நிரந்தரமாக வாராந்திர அதிவிரைவு ரயில் (16363)வருகிற 18- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன்கிழமை மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் எா்ணாகுளத்தில் இரவு 11.50 மணிக்கு புறப்படும். சிவகாசிக்கு அந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு சிவகாசிக்கும், 11 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும். வேளாங்கண்ணிக்கு மாலை 5.35 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்கத்தில் வேளாங்கண்ணி- எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (16364) ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கும், சிவகாசிக்கு 2.30 மணிக்கும் வந்து சேரும். எா்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11.55-க்கு வந்து சேரும்.

இந்த புதிய ரயில் சேவை மூலம் சிவகாசி, மதுரை பயணிகள் நேரடியாக எா்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு பயணிக்க இயலும்.இந்த தகவலை சிவகாசி மாநகர ரயில் பயணிப்போ் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.