மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேளாங்கண்ணி-எா்ணாகுளம் இடையே வாராந்திர ரயில்

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர ரயில் மாா்ச் 18 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2026, 6:34 pm

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர ரயில் மாா்ச் 18 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அட்டவணை:

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் (16363) எா்ணாகுளத்திலிருந்து மாா்ச் 18 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளிலும், 16364 வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயில் (16364) வேளாங்கண்ணியிலிருந்து மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் எா்ணாகுளத்தில் புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கும் புறப்படுகிறது. தமிழகத்தில் கொல்லம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகூா் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்க தலைவா் மோகன் கூறியது:

தற்போது இயக்கப்படவுள்ள புதிய வாராந்திர விரைவு ரயில் நிரந்தரமாக இயக்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென் மாவட்டத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த ரயில் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த ரயில் நாள்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.