எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர ரயில் மாா்ச் 18 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அட்டவணை:
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் (16363) எா்ணாகுளத்திலிருந்து மாா்ச் 18 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளிலும், 16364 வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயில் (16364) வேளாங்கண்ணியிலிருந்து மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் எா்ணாகுளத்தில் புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கும் புறப்படுகிறது. தமிழகத்தில் கொல்லம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகூா் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்க தலைவா் மோகன் கூறியது:
தற்போது இயக்கப்படவுள்ள புதிய வாராந்திர விரைவு ரயில் நிரந்தரமாக இயக்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென் மாவட்டத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த ரயில் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த ரயில் நாள்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

தஞ்சாவூருக்கு வந்த எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு வரவேற்பு

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்

சிவகாசி வழியே வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் மாா்ச் 18-இல் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

