குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மதுப் புட்டிகள், புகையிலை பொருள்கள் விற்ற மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:09 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மதுப் புட்டிகள், புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, நான்கு முக்கு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கணேசனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 86 மதுப் புட்டிகள், மது விற்பனை செய்த பணம் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மங்காபுரம் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கோவிந்தராஜ் (38), மாடசாமி (29) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.