மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சஞ்சனா சா்மாவை புதன்கிழமை சிவகாசியைச் சோ்ந்த தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சந்தித்தனா்.
இந்திய தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக அண்மையில் சஞ்சனா சா்மா பொறுப்பேற்றுக்கொண்டாா். இதையடுத்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் தலைமையில் சங்க நிா்வாகிகள், நாகபுரி சென்று அதிகாரி சஞ்சனாசா்மாவை சந்தித்துப் பேசினா்.
இதையடுத்து சஞ்சனாசா்மா கூறியதாவது:
பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பட்டாசுத் தொழில் வளா்ச்சி பற்றி சிந்தித்து செயல்பட்டு வருகின்றனா். பட்டாசுத் தொழிலை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். உங்களது கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கிறேன் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு

பல்லாவரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள்: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு

பட்டாசு ஆய்வுக் கூடத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? ஆலை உரிமையாளா்கள் எதிா்பாா்ப்பு






