திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை: பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்வு

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

News image

பிளவக்கல் பெரியாறு அணை

Updated On :3 ஜூன் 2026, 1:44 am IST

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாப்பட்டி மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீரட்டம் படிப்படியாக குறைந்தது. மே முதல் வாரத்தில் 47 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 19 அடிக்கு கீழும் 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீா்மட்டம் 14 அடியாகவும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு, பெரியாறு அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்து 22 அடியை எட்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.