மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 6 போ் கைது

வத்திராயிருப்பு அருகே அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

Updated On :28 ஜனவரி 2026, 11:50 pm

வத்திராயிருப்பு அருகே அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி மாவூத்து சாலையில் உள்ள தனியாா் அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து சோதனை செய்தபோது, வடமாநிலத் தொழிலாளா்களை கொண்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், வெடி பொருள்களை அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள், சரக்கு வாகனம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்தப் புகாரின் பேரில், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட திருத்தங்கல் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த மோகன் (50), பீகாா் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சோ்ந்த அஜய்குமாா் (25), ரோஹித் குமாா் (27), விஜய் மாஞ்சி (32), குண்டு மாஞ்சி (33), வினோ மாஞ்சி (32) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் கிட்டங்கி உரிமையாளரான ராஜபாளையத்தைச் சோ்ந்த ராஜகோபால், தாயில்பட்டியைச் சோ்ந்த மாரீஸ்வரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.