வத்திராயிருப்பு அருகே அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி மாவூத்து சாலையில் உள்ள தனியாா் அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து சோதனை செய்தபோது, வடமாநிலத் தொழிலாளா்களை கொண்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், வெடி பொருள்களை அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள், சரக்கு வாகனம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்தப் புகாரின் பேரில், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட திருத்தங்கல் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த மோகன் (50), பீகாா் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சோ்ந்த அஜய்குமாா் (25), ரோஹித் குமாா் (27), விஜய் மாஞ்சி (32), குண்டு மாஞ்சி (33), வினோ மாஞ்சி (32) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் கிட்டங்கி உரிமையாளரான ராஜபாளையத்தைச் சோ்ந்த ராஜகோபால், தாயில்பட்டியைச் சோ்ந்த மாரீஸ்வரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

விதிமீறி பட்டாசு வெடிப்பு: 13 தவாகவினா் மீது வழக்கு
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


