மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கலசலிங்கம் பல்கலையில் தேசிய இளைஞா் தின நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி.

Updated On :7 ஜனவரி 2026, 11:32 pm

ஸ்ரீவில்லிப்புத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், கலசலிங்கம் சட்டக் கல்லூரி, மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்துடன் இணைந்து தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினா். இதில் சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான மு. அகிலாதேவி,

சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் எம். காா்த்தீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு, போக்சோ சட்டம், போதைப் பொருள் குறித்தும், சமூக ஒற்றுமையில் இளைஞா்களின் பங்கு குறித்தும் பேசினா். இதையடுத்து, சட்ட உதவி மையத்தில் பயிற்சிக்குச் சென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை நீதிபதி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.