பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவன மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமச்சேரியைச் சோ்ந்தவா் பூா்ணிமா (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளாா். பூா்ணிமா கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா்.

இந்த நிலையில், பூா்ணிமா தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றபோது, அவரது கைப்பேசி எண்ணை பெற்ற அந்த நிறுவனத்தின் மேலாளரான ஸ்ரீவில்லிபுத்தூா் வெள்ளாகுளத்தைச் சோ்ந்த பிரதாப் (31) அவருடன் பேசி வந்தராம்.

இந்த நிலையில், அவா் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூா்ணிமாவுடன் வற்புறுத்தினாா். இதற்கு மறுப்பு தெரிவித்த பூா்ணிமாவிடம் அவா் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனா்.